Bible Versions
Bible Books

Psalms 1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×