Bible Books

:
-

1. பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து சீயோனை நினைத்த போது, நாங்கள் கண்ணீர் சிந்தினோம்.
2. அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3. எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்; எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: 'சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்' என்றார்கள்.
4. ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5. யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.
6. உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.
7. ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: 'தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்' என்று அவர்கள் சொன்னார்களே!
8. பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.
9. உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×