Bible Books

:
-

1. உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே, உம்மைப் போற்றிப் புகழ்கிறோம், உமது பெயரைப் போற்றுகிறோம். உமது வியத்தகு செயல்களை எடுத்துரைக்கிறோம்.
2. நான் குறித்த நாளிலே நீதியின்படி நியாயம் வழங்குவேன்.
3. மாநிலம் தன் குடிகள் அனைவரோடும் அசைவுறலாம். ஆனால் நான் அதன் தூண்களை உறுதிப்படுத்தி உள்ளேன்.
4. இறுமாப்புடையவர்களை நோக்கி, ' செருக்குக் கொள்ள வேண்டாம்' என்கிறேன். நெறிகெட்டவர்களை நோக்கி, 'உங்கள் பலத்தைக் காட்டவேண்டாம்' என்கிறேன்.
5. உன்னதருக்கு எதிராக உங்கள் வல்லமையைக் காட்ட வேண்டாம். கடவுளுக்கு எதிராகச் செருக்குற்றுப் பேச வேண்டாம்.
6. ஏனெனில், இவ்வல்லமை உங்களுக்கு கிழக்கினின்றும், வராது, மேற்கினின்றும் வராது. பாலை வெளியினின்றும் வராது; மலைப்பாங்கினின்றும் வராது.
7. நீதித் தீர்ப்பளிப்பவர் கடவுளே. ஒருவனைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவனை உயர்த்துகின்றார்.
8. ஆண்டவருடைய கையில் துன்பக் கலம் ஒன்றிருக்கிறது: நிறைய நுரை பொங்கும் மது ரசக் கலவை அதில் உள்ளது. அதிலிருந்து இறைவன் ஊற்றுகிறார். உலகிலுள்ள தீயோர் அனைவரும் அதை வண்டல் மட்டும் உறிஞ்சிக் குடிப்பர்.
9. நானோ என்றென்றும் பெரு மகிழ்ச்சி கொள்வேன். யாக்கோபின் கடவுளுக்குப் புகழ்பாடுவேன்.
10. தீயவர்களின் வலிமையை முற்றிலும் முறித்துப் போடுவேன். நீதிமானின் வலிமையோ ஓங்கி நிற்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×